பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்
( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்

இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள்.

சுதந்திர இந்தியா, குடியரசு நாடாக ஆன பின்னர், அந்தப் பட்டியலில் மேலும் பல சாதிகள் சேர்க்கப்பட்டு, 1950ஆம் வருடம் “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்” என அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். பட்டியல்படுத்தப்பட்டது, அவர்களை மேம்படுத்துவதற்காகத்தான்; சிறுமைப்படுத்த அல்ல. ஆனால், அவர்கள் மேலும் இழிவாக நடத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க “குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 இயற்றப்பட்டு, அதைச் செம்மையாக செயல்படுத்த, 1977ஆம் வருடம் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இதனால் வரவேற்கத்தக்க தாக்கம் ஏற்படாததாலும், தீண்டத்தகாதவர்கள் என சிலரால் கூறப்படும் நபர்கள் மீதான கொடூரக் குற்றங்கள் அதிகரித்ததாலும், அக்குற்றங்கள் வன்கொடுமைகள் என அழைக்கப்பட்டு, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 இயற்றப்பட்டும், அதை திறம்பட அமல்படுத்துவதற்காக, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 உருவாக்கப்பட்டு, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கமே உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வகை செய்யப்பட்டது. விதிகள் 2009, 2011 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பல திருத்தங்களுக்கு உள்ளாகியும் தற்போது 16.04.2016 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி, இழப்பீட்டு தொகை 8 லட்சத்து 25 ஆயிரம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. வன்கொடுமைகளின் வகைப்பாடுகளை அதிகப்படுத்தி, சட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றங்களின் கடப்பாடுகளை அதிகரித்து, 2014இல் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியானதால், திருத்தச்சட்டம் 1/2016இன்கீழ் உருவாக்கப்பட்டு, அது 26.01.2016இல் அமலுக்கு வந்துள்ளது.

Also Available at


PI-Eng-Vol-1
Police Investigation
Powers, Tactics and Techniques

Volume 1 and 2 of this book together constitute a single book. This book is a benchmark and best-practice model and regarded as the

More
PI-Eng-Vol-2
Police Investigation
Powers, Tactics and Techniques

Volume 2 and 1 of this book together constitute a single book. This book is a benchmark and best-practice model and regarded as the

More
PI-tamil-Vol-1
காவல் புலன் விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்
இந்நூல் இரண்டு பாகங்களாக 2013இல் முதன் முதலாக தமிழில் வெளியிடப்பட்டும், காவல்துறையினர்
More
PI-tamil-Vol-2
காவல் புலன் விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்
இந்நூல் இரண்டு பாகங்களாக 2013இல் முதன் முதலாக தமிழில் வெளியிடப்பட்டும், காவல்துறையினர்
More
5_Immoral Traffic-Prostitution in India
Immoral Traffic
Prostitution in India

Immoral Traffic Prostitution in India. An acclaimed book on the plights of the victims of trafficking and prostitution

More
6_CrPC Tamil New Wrapper-Front
குற்ற விசாரணை முறைச் சட்டம்
2018 சட்ட திருத்தங்களுடன்
தமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்;
More
7_IPC-Tamil-New
இந்திய தண்டனைச் சட்டம்
2018 சட்ட திருத்தங்களுடன்
தமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்;கீழமை
More
8_IEA-Tamil-New
இந்திய சாட்சியச் சட்டம்
2018 சட்ட திருத்தங்களுடன்
தமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை
More

Atrocities against SCandST in Tamil
காவல் புலன்விசாரணை - பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்

மான்கள், புலிகள், யானைகள் மற்றும் சிங்கங்கள் போன்ற விலங்குகள், தனித்தனியே

More
9_PI-Atrocities against SCandST-ENGLISH
Police Investigation
Atrocities against SCs and STs

It is highly deplorable that the caste system exists only in India and that too only in Hinduism. It is a selfish and opportunistic creation of

More
11_Juvenile Justice Bare act
சிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்
JJ Act

குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு

More
13_PoCSO-Tamil
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்
PoCSO

வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட,

More

 

 

Login

Lost your password?

Create an account?